கோவையில் நகைக்கடையில் 4 கிலோ தங்கள் கொள்ளையடித்த 3 பேர் கைது


கோவையில் நகைக்கடையில் 4 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை ராஜவீதி பகுதியில் செயல்பட்டு வந்த சித்தி என்னும் நகைக்கடையில் கடந்த மார்ச் 2ம் தேதியன்று கத்தி முனையில் 4.25 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.



இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதே நகைக்கடையில் வேலை செய்து வந்த ரியாசுதீன் என்பவர் தனது நண்பர்கள் அசாருதீன் மற்றும் விஜயகுமார் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சத்தியமங்கலம் அருகே ஆசனூர் போலீசார் வாகன தனிக்கையின் போது கர்னாடகாவிற்கு பேருந்து மூலம் தப்பிச் செல்ல முயன்ற மேற்குறிப்பிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, மூவரையும் கோவைக்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 கிலோ தங்க நகைகளை மீட்டனர். தொடர்ந்து மூவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...