உடுமலை, மடத்துக்குளத்தில் கனமழை - குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி

உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதி கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் இப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது இடைவிடாமல் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்களும் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.



பொதுமக்கள் கூறும் பொழுது, தற்பொழுது மடத்துக்குளம் பகுதியில் இடைவிடாமல் கன மழை பெய்து வருகின்றது. கோவை-திண்டுக்கல் தேசிய பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் விரிவு படுத்தாத நிலையில் தற்போது குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலை துறைக்கும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்.

Newsletter

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்க்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...