உணவு பாதுகாப்பு துறை ஆணையர் தலைமையில் அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டம்


கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் தலைமையில் அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அச்சிடப்பட்ட செய்தி தாள்களில் உணவு பொருட்களை பொட்டலமிடுவதற்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது குறித்தும், தடையினை மீறி பயன்படுத்தும் போது பறிமுதல் செய்வதோடும் மற்றும் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் குளிர்பான கடைகள், தர்பூசணி பழக் கடைகள், பழச்சாறு விற்பனை நிலையம், ஐஸ் க்ரீம் கடைகள் மற்றும் சாலையோர மாலை நேர சிற்றுண்டி கடைகள் நடத்தும் உணவு வணிகர்களிடம் பாதுகாப்பான குடிநீர், செயற்கை நிறமி இல்லாத உணவு பொருட்கள், ஒரு முறை உபயோகப்படுத்திய எண்ணெய்யை மீண்டும் உபயோகப்படுத்துதல் கூடாது என்றும், இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், பாதுகாப்பற்ற மற்றும் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் புகார்களை 0422- 2220922 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை உணவு பாதுகாப்பு பிரிவு நியமண அலுவலர் தெரிவித்துள்ளார்.



Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...