கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் ஐந்து நிமிடத்தில் செல்போன் திருடனை விரட்டி பிடித்த காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் ராஜ் என்ற பயணியிடம் செல்போனை திருடிச்சென்ற நபரை விரட்டிப்பிடித்த ஹெட் கான்ஸ்டபிள் கந்தாமிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரவித்து வருகின்றனர்.


கோவை: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ் தனது குடும்பத்துடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தவர். ஈஷா யோகா மையம் சென்று திரும்பி வரும் பொழுது பேருந்தில் அவர் பையில் இருந்த மொபைல் போன் காணாமல் போனது. இதனையடுத்து சற்று பதறிப் போனவர்தனது மொபைலை காணவில்லை என ராஜ், காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் புற காவல் நிலையத்தில் பணியில் இருந்த ஹெட் கான்ஸ்டபிள் கந்தசாமி இடம் புகார் அளித்ததார்.



இதன்பேரில் பேருந்தில் வந்தவர்களைஇரண்டு பட்டாலியன் முத்துகிருஷ்ணன் மற்றும் மதன் ஆகியோருடன்சோதனை செய்தார். அப்பொழுது மொபைல் போனை திருடியவன் தப்பி ஓடுவதை கண்ட காவல்துறையினர் ஓடிச்சென்று அவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் சற்று பரபரப்பு நிலவியது. காவல்துறையினரின் இந்த துரித செயலை கண்டு பயணிகள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...