சூலூர் அருகே குடிநீர் பைப்பை உடைத்த மர்ம நபர்கள் - காவல் நிலையத்தை நள்ளிரவில் முற்றுகையிட்ட பொதுமக்கள்

அய்யம்பாளையம் கிராத்தில் குடிநீர் பைப்பை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்நிலையத்தை நள்ளிரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி அய்யம்பாளையம். இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு ஊராட்சி சார்பில் பொது பயன்பாட்டுக்காக நிலத்தடி நீர் தோண்டப்பட்டு அதன் மூலம் தண்ணீரானது வழங்கப்பட்டு வருகிறது.

அய்யம்பாளையம் பகுதியில் நிலத்தடி நீர் கொண்டு செல்லும் குடிநீர் பைப்பை சில மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த ஊர் பொதுமக்கள் பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.



உடனடியாக அந்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி திருப்பூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி துணைக் கண்காணிப்பாளர் தங்கராமன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின்னரே போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...