திருப்பூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு - 45,885 பேர் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 தேர்வில் 45,885 பேர் பங்கேற்பு. 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது, கண்காணிப்பு மற்றும் அதிகாரிகள் மொபைல் டீம், பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 தேர்வில், திருப்பூர் மாவட்டத்தில் 45 ஆயிரத்து 885 பேர் எழுதுகிறார்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 மூலம், தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 காலிபணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் தேர்வு நடக்கிறது.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் தொகுதி 4 தேர்வை, 45 ஆயிரத்து 885 பேர் எழுதுகிறார்கள். இதற்காக மாவட்டம் முழுவதும் 155 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்கும் வகையில் 45 மொபைல் டீம் மற்றும் 18 பறக்கும் படையினர், 155 கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



காலை 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடையாது என்பதால், தேர்வாளர்கள் 8 மணி முதலே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினர். அனுமதிப்பதற்கு முன்பாக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச், பர்ஸ் ஆகியவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஹால் டிக்கெட் உடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்த பின்னரே தேர்வு மையத்திற்கு பட்டனர். ஒன்பது 30 மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. ஐந்து நிமிட இடைவெளிக்கு பிறகு தேர்வாளர்கள் தேர்வு எழுத துவங்கினர்.



தேர்வுமைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அனைத்து தேர்வு மையங்களும் வீடியோ கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...