மருதமலையில் இருந்து முதுமலை காப்பகத்திற்கு அனுப்பப்பட்ட குட்டி யானை

மருதமலையில் அதன் தாயுடன் சேர முடியாத குட்டி யானையை வனத்துறையினர் இன்று காலை முதுமலை யானைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவை மருதமலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 40 வயது பெண் காட்டு யானை சிகிச்சைக்கு பிறகு காடு திரும்பியது.

இந்நிலையில் தாயுடன் இருந்த குட்டி யானை பிரிந்த நிலையில் தாயுடன் சேர்க்க நான்கு நாட்கள் முயற்சி செய்யப்பட்டது. முயற்சி கைகொடுக்காத நிலையில் முதுமலை யானைகள் காப்பகத்திற்கு குட்டி யானை இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை வழங்கப்பட்ட தாய் யானை ஆரோக்கியமாக உள்ள நிலையில் சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்தபோது குட்டியானை தாயிடமிருந்து பிரிந்து மற்ற கூட்டத்துடன் இருந்தது. இந்நிலையில் நான்கு நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு தாய் யானை காட்டிற்குள் சென்றது.

இதனை அடுத்து மற்றொரு கூட்டத்துடன் இருந்த குட்டி யானையை பிரித்து வனத்துறையினர் தாயானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இரண்டு குழுவாக வனத்துறையினர் தாய் மற்றும் குட்டி யானையை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நான்கு நாட்களுக்கும் மேலாக இந்த முயற்சி பலனை பலனளிக்காத நிலையில் இன்று காலை முதுமலை யானைகள் முகாமிற்கு நான்கு மாதமே ஆன குட்டி யானை மருதமலை பகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே முதுமலை யானைகள் முகாமில் இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் மூன்றாவது குட்டி யானையாக செய்துள்ளது மருதமலையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இந்த குட்டி யானை.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...