துடியலூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்காக இலவச கண் சிகிச்சை முகாம்

பன்னீர்மடை கிழக்கு திட்டப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் மக்களுக்காக தி ஐ பவுண்டேசன் சார்பில் சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பன்னீர்மடை கிழக்கு திட்டப்பகுதியில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 64 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் கோவையில் பல்வேறு இடங்களில் இருந்து மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் வந்து இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றனர்.



இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர்கள் ஒன்றிணைந்து நலச்சங்கம் உருவாக்கி தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு ஈடாக தூய்மையாகவும், சுற்றிலும் பல வகையான செடிகளை நட்டும், ஆரோக்கியம் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றியுள்ளனர். கோயமுத்தூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த குடியிருப்பு முதலிடம் பெறுவதற்காக தகுதியை பெற்றுள்ளது.

மேலும் ஒவ்வொரு வீடுகளில் துணி காயபோடுவதற்கு கூட கம்பிகள் கட்டப்பட்டு இந்த அடுக்குமாடி குடியிருப்பை தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் பன்னீர்மடை கிழக்கு திட்டப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.



இதனையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் மக்களுக்காக தி ஐ பவுண்டேசன் சார்பில் சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதனை நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவர் வி.கே.வி.கார்த்திகேஸ்வரி சுந்தர்ராஜ், முன்னாள் தலைவர் வி.கே.வி.சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார்.

தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் நிர்வாக பொறியாளர் மாடசாமி, துணை நிர்வாக பொறியாளர் சுதர்சன், சமுதாய வளர்ச்சி உதவியாளர் விஸ்வேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் நலச்சங்க துணைத்தலைவர் சந்தோஷ்குமார், ரஷ்யா, மாலினி, முனுசாமி, சபரிமனோ, காவேரி, இந்திராணி, நிர்மலா, சாந்தி, சமுத்திரவள்ளி உள்ளிட்ட நிர்வாகிகள், குடியிருப்பு வாசிகள் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...