சிங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் திருட்டு - காவல்துறை விசாரணை

அமெரிக்காவில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ள வேணுகோபால் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் என்ற மர்ம யார் என்று சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர், திருச்சி ரோட்டில் உள்ள அப்பார்ட்மென்டை சேர்ந்தவர் கார்மெல் வேணுகோபால்(60). இவர் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் அமெரிக்காவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், நேற்று ஜூன்.9 அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனைப்பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் கார்மெல் வேணுகோபாலுக்கு போன் செய்து சொன்னார். உடனே கார்மெல் வேணுகோபால், நண்பரான கோவை இருகூரை சேர்ந்த நந்தகோபால்(43) என்பவரிடம் விவரத்தை கூறி வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.

அவர் சென்று பார்த்தபோது, வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் அங்கிருந்த ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.பின்னர், இது குறித்து நந்தகோபால் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

பின் அந்த புகாரின்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பதிவாகியிருந்த 1 கைரேகை பதிவை கைப்பற்றினர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...