பொள்ளாச்சியில் சாலை விபத்தில் உயிரிழந்த புகைப்பட கலைஞரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் நிதி உதவி

சாலை விபத்தில் உயிரிழந்த புகைப்பட கலைஞர் அஜய் ஜோசப் –வின் குடும்பத்தினற்கு பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஒரு லட்சம் ரூபாய் வழங்கி ஆறுதல் கூறினார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் (தினமணி) நாளிதழில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த அஜய் ஜோசப் கடந்த 30ம் தேதி பணியை முடித்துக் கொண்டு செல்லப்பம்பாளையம் புதூரில் உள்ள அவரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



இதனயைடுத்து அவரது குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அவரது மனைவி சபீனாவிடம் வழங்கினார். இதில் நகர துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...