இடையர்பாளையம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

இடையர்பாளையம், வடவள்ளி ரோடு, நீலியம்மன் நகரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஆன்லைன் சூதாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


கோவை: கோவை இடையர்பாளையம், வடவள்ளி ரோடு, நீலியம்மன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். தனியார் நிறுவன ஊழியரான இவர் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, ட்ரீம்-11 சூதாட்டத்தில் பணம் கட்டினார். இதில் வென்றால் முதல் பரிசு ரூ. 1 கோடி வரை கிடைக்கும். ஆனால் அவர் அதில் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்தார்.

இதுதவிர முத்துக்குமார் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்திலும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாக தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று ஜூன்.10 வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர்.



பின்னர் இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது தற்கொலை செய்த முத்துக்குமார் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டவர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேற்கொண்டு இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...