விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி கூட்டணி தலைவர்கள் முடிவு – கோவையில் ஜி.கே.வாசன் பேட்டி

ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு துறைகளில் நேர்மையானவர்களை, திறமையானவர்களை பிரதமர் தேர்ந்தெடுத்ததிருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் நல்லரசாக செயல்பட்டுக்கொண்டிருக்கிற மத்திய அரசு மூன்றாவது முறை இந்தியாவை வல்லரசாக மாற்றும்.

ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவை பல்வேறு துறைகளில் சரியான முறைகளில் வழிநடத்தக்கூடிய நேர்மையானவர்களை திறமையானவர்களை பிரதமர் தேர்ந்தெடுத்ததிருக்கிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொருத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் முடிவெடுப்பார்கள்.

நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்தில் ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் சில வருடங்களாக வெளி மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் வெகு சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தயவுகூர்ந்து கல்வியை அரசியலாக வேண்டாம், மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்ப வேண்டாம் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...