கோவை சொக்கம்புதூர் அருகே குடிபோதையில் மனைவி, மகளை தாக்கிய கணவர் கைது

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Coimbatore: கோவை சொக்கம்புதூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் சின்னராஜ்(43). கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர் அடிக்கடி போதையில் தனது மனைவி லதா(40) உடன் தகராறு செய்து வந்துள்ளார். 

இதேபோல், நேற்று முன்தினம் கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சின்னராஜ் தகாத வார்த்தைகள் பேசி லதாவை தாக்கினார். இதனை தட்டி கேட்ட அவரது மகளையும் தாக்கி மிரட்டல் விடுத்தார். 

பின்னர் இது குறித்து லதா செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...