கேஎம்சிஎச் மருத்துவமனையை மூட வேண்டும் - கோவை சுகாதார பணிகள் அலுவலகம் முன்பு நபர் ஒருவர் தர்ணா

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக ராஜா என்பவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் கேஎம்சிஎச் மருத்துவமனையை மூட வேண்டும் என்று கோவை சுகாதார பணிகள் அலுவலகம் முன்பு ரகுநாத் என்பவர் தனி ஆளாக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள கேஎம்சிஎச் மருத்துவமனையில் கடந்த மாதம் ராஜா என்பவர் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகிகள், காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பீளமேடு காவல்துறையினர் இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட மருத்துவமனை நிர்வாகிகள், காவலர்கள் உட்பட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



இந்நிலையில் இந்த சம்பவம் மருத்துவமனையில் நடைபெற்றதால் தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை இது குறித்து விசாரணை நடத்தி மருத்துவமனையை மூட வேண்டுமென ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த ரகுநாத் என்பவர் 10 நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட சுகாதாரப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை அலுவலகத்தில் மனு அளித்தார்.

இந்நிலையில் மனு அளித்து 10 நாட்களுக்கு மேலாகியும் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறி சுகாதார பணிகள் அலுவலகம் முன்பு இன்று ஜூன்.12 அமர்ந்து அவர் தர்ணாவில் ஈடுப்பட்டார். தர்ணாவில் ஈடுப்பட்ட அவர் மருத்துவத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அரசு அதிகாரிகள் செயல்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...