கோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி – ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி-பாலக்காடு டவுன் ரயில் ஜூன் 14 -ஆம் தேதி கோவை நிலையத்துக்கு வருவது தவிர்க்கப்படும். மாற்றாக, இருகூா், போத்தனூா் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்படும். இந்த ரயில், சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை ரயில் நிலையங்களில் நின்று செல்வது தவிர்க்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக ஷொரணூா்-கோவை ரயில் (எண்:06458) ஜூன் 14-இல் ஷொரணூா்-போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும். கோவை-ஷொரணூா் ரயில் (எண்: 06459) போத்தனூா்-ஷொரணூா் இடையே மட்டும் இயக்கப்படும்.

மேட்டுப்பாளையம்-கோவை ரயில் (எண்: 06817) மேட்டுப்பாளையம்-வடகோவை இடையே மட்டும் இயக்கப்படும். கோவை-மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 06010) வடகோவை-மேட்டுப்பாளையம் இடையே மட்டும் இயக்கப்படும்.

திருச்சிராப்பள்ளி-பாலக்காடு டவுன் ரயில் (எண்:16843) ஜூன் 14 -ஆம் தேதி கோவை நிலையத்துக்கு வருவது தவிர்க்கப்படும். மாற்றாக, இருகூா், போத்தனூா் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்படும். இதன் காரணமாக இந்த ரயில், சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை ரயில் நிலையங்களில் நின்று செல்வது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...