வெளிநாடுகளுக்கு கோவையில் இருந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

2022ல் 1.61 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.57 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இதனால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகரில் அமைந்துள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.இந்த அலுவகத்தில் கடந்த ஆண்டு மட்டும் கடவுசீட்டு (பாஸ்போர்ட்) வேண்டும் என்று 1.83 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், மொத்தம் 1.77 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக இம்மையத்தின் பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ் இன்று ஜூன்.13 தெரிவித்துள்ளார்.

2008ல் கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இத்தனை பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. 2022ல் 1.61 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.57 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.இதனால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்துவெளிநாடுகளுக்கு பறக்க வேண்டும் என்று விரும்புவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை காணமுடிகிறது.2023ல் சமர்ப்பிக்கப்பட்ட 30% விண்ணப்பங்கள் குன்னூர், ஈரோடு, சேலம், ராசிபுரம் தபால் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையம் மூலமாக வந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...