குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் - போலீஸ் தடியடி, கல்வீச்சு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் சிறைபிடித்து போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சாமளாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அப்பகுதி பொதுமக்கள் சாமளாபுரம் - மங்களம் சாலையில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அவ்வழியே வந்த சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜை போரட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சிறைபிடித்து போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து என்ன செய்வது எனத்தெரியாத அவர், டாஸ்மாக் கடையை அகற்றும் வரை தானும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்து மக்களுடன் அமர்ந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, அப்பகுதீயில் அதிகளவு போலிசர் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, அதிகாரிகள் பொது மக்களிடையே  பேச்சுவார்த்தை நடத்தி கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியும் பொதுமக்கள் போராட்டத்தினை கைவிடாததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலர் காவல்துறையினரின் வாகனங்களை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

போலீசார் தடியடி நடத்துவதற்கு முன்பாக சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் காவல்துறையினர் பேசி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்த பிறகே தொடர்ந்து இச்சம்பவங்கள் நடைபெற்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் தடியடியில் பொதுமக்களில் ஒருவருக்கு தலையில் அடிபட்டு அதிகளவிலான ரத்தம் வெளியேறியது. அவரை அருகில் இருந்தோர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழல் நிலவுவதால் பாதுகாப்புக்கு மேலும் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவை பத்திரிகையாளர் மீது திருப்பூர் காவல்துறையினர் தாக்குதல்:-

முன்னதாக, திருப்பூரில் மதுக்கடையை அகற்றக்கோரியான பொதுமக்களின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற கோவை பத்திரிகையாளர்கள் மீது திருப்பூர் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், காயம் அடைந்த கோவை பத்திரிகையாளர்கள் கோவை மேற்கு மண்டல ஐஜி பாரி-யிடம் புகார் மனு அளித்தனர். 

அதனைப் பெற்றுக்கொண்ட ஐஜி பாரி, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் குறித்தான மனு மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...