கோவையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜூன் 13 அன்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரி தமிழக அரசை கண்டித்தனர்.


கோவை: மாநிலத் தழுவிய மாவட்ட அளவிலான தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் இன்று ஜூன்.13 நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தமிழக அரசை கண்டித்தும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டமானது இன்று ஜூன்.13 நடைபெற்றது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கு கடந்த ஆட்சியில் மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்பட்டது. அப்போது 80% முதல் 90% வரை மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலமாக ஆசிரியர்கள் பயனடைந்தனர். ஆனால் திமுக ஆட்சி அமைத்த பிறகு அதனை குறைத்து 30% முதல் 40% வரை மட்டுமே பயனடையும் வகையில் மாற்றி உள்ளனர்.

மேலும் United India Insurance நிறுவனம் மூலமாக காப்பீட்டு வழங்கி வந்த நிலையில் தற்போது அதனை MD India மற்றும் Medi Assist என்ற நிறுவனம் மூலம் குறைந்த அளவில் திமுக அரசு வழங்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் ஆசிரியர்களுக்கு கட்டணம் இல்லாத சிகிச்சை வழங்க வேண்டும் இல்லாவிட்டால் ஜூலை 17-ம் தேதி United India Insurance காப்பீட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக அரசை கண்டித்தும் மாபெரும் மாநிலம் அளவிலான போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...