கோவையில் காவல்துறை உடை அணிந்து பலரை ஏமாற்றிய போலி பெண் காவலர் கைது

செல்வபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை வாங்கிவிட்டு சரியாக ஈஎம்ஐ கட்டமால் இருந்த போலி பெண் காவலர் அம்பிகா என்பவரையும், அவரது நண்பர் ரகுவையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை, செல்வபுரம் பகுதியில் பழைய இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வரும் தினேஷ் என்பவரிடம் கடந்த டிசம்பர் மாதம் இருசக்கர வாகனம் ஒன்றை அம்பிகா வாங்கி உள்ளார். இருசக்கர வாகனத்தை வாங்கும் பொழுது தான், பெண் காவலர் எனக் கூறி காவல் துறை அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளார்.

மேலும் இருசக்கர வாகனத்தை வாங்கியதற்கு முறையாக ஈஎம்ஐ செலுத்தாமல் இருந்த நிலையில், வாகனத்தை விற்ற தினேஷ் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் சென்று விசாரித்தார். அப்போது அம்பிகா என்ற பெயரில் பெண் காவலர் யாரும் இல்லை என்பது தெரியவந்தது. இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் வாகன விற்பனையாளர் தினேஷ் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், போலி பெண் காவலர் அம்பிகாவையும், அவரது நண்பர் ரகு என்பவரையும் நேற்று ஜூன்.13 கைது செய்தனர். காவல்துறை உடை அணிந்து பலரையும் பெண் போலீசார் என கூறி அம்பிகா பலரையும் ஏமாற்றி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரிடமும் செல்வபுரம் போலீசார் தற்போது ஜூன்.14 விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...