ஆனைகட்டி அருகே புளியபதி மலைப்பகுதியில் சிறுத்தைகளுக்குள் சண்டை - ஆண் சிறுத்தை காயம்

புளியபதி என்ற மலைப் கிராமப் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் மோதிக் கொண்டன. இதில் காயமடைந்த ஆண் சிறுத்தை, சிகிச்சை அளிக்க சென்ற வனத்துறையினரை துரத்தியதால் பதற்றம் நிலவியது.


கோவை: தமிழ்நாடு-கேரளா எல்லையான கோவை, ஆனைகட்டி அடுத்து உள்ள புளியபதி என்ற மலைப் கிராமப் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் மோதிக் கொண்டன. இதில் ஆண் சிறுத்தை காயங்களுடன் கேரள மாநிலத்திற்கு சொந்தமான வனத்தில் படுத்துக் கொண்டு இருந்தது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள், கேரள மாநில வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினர் காயங்களுடன் படுத்து இருந்த சிறுத்தை அருகில் சென்ற போது திடீரென வனத் துறையினரை துரத்தியது.



நீண்ட முயற்சிக்கு பின்னர் காயம் அடைந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வலையால் மூடி அந்த சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர்.

பின்னர் அங்கு உள்ள சைலண்ட் வேலி வனத்துறை முகாமிற்கு கொண்டு சென்று காயம் அடைந்த சிறுத்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையிலே, காயம் பட்ட சிறுத்தையை பிடித்து சென்ற வனத் துறையினரை தாக்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...