தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கு இடத்தை தேர்வு செய்ய திட்டம்

கோவையில், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தேசிய செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். மேலும் விரைவில் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.



கோவை: தமிழக வெற்றி கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்கி இல்ல காதணி நிகழ்ச்சியில், அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார்.



விழாவில் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக இலவச நடமாடும் உணவு வாகனத்தை தமிழக வெற்றிக்கழக தேசிய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளதாக கூறிய அவர், கோவை தெற்கு மாவட்டத்திலேயே இரண்டு வீடு கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கு இடத்தை நாங்கள் தேர்வு செய்து கொண்டிருப்பதாகவும், இடத்தை தேர்வு செய்த பிறகு எங்கள் தலைவருடைய கவனத்திற்கு கொண்டு சென்று அவர் எந்த இடத்தை தேர்வு செய்வாரோ அதுகுறித்து அறிவிக்கப்படும் என கூறினார். முன்னதாக விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும், தெரிவித்தார்.

நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான கேள்விக்கு எங்கள் தலைவருடன் கலந்த ஆலோசித்து அதற்குண்டான விவரங்களை தெளிவாக கூறுவோம் என பதிலளித்தார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...