தாராபுரம் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

தாராபுரம் திருப்பூர் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை புரிந்தனர்.


திருப்பூர்: உலகம் முழுவதும் இன்று தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் கொண்டாடி வரும் நிலையில் இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாம் பக்ரீத் விழாவையொட்டி தாராபுரம் திருப்பூர் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ஜமாத் மற்றும் பள்ளிவாசல் முத்தவல்லிகள், முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அல்லாஹ்விடம் தொழுகை செய்தும், துவா செய்தும் தியாக திருநாளாம் பக்ரீத் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.



தொழுகையின்போது சகோதரத்துவம், சமத்துவம் வளர்க்கவும், வறுமை நீங்கி மழை பொழியவும் தொழுகையை மேற்கொண்டனர். பின்னர் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...