அமராவதி வனப்பகுதியில் காயம் அடைந்த ஆண் புலிக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விடுவிப்பு

மஞ்சம்பட்டி வன பகுதியில் காயத்துடன் நடக்கமுடியாமல் இருந்த ஆண் புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து வயிற்று பகுதியில் சிக்கியிருந்த கயிற்றை அகற்றி மீண்டும் வனப்பகுதியில் விடுவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அமராவதி வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சம்பட்டி வன பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது புலி ஒன்று உடலில் காயங்களுடன் நடக்க முடியாமல் இருந்ததை கண்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், மருத்துவ குழுவினருடன் சென்று புலியை கண்காணித்து வந்துள்ளனர். அப்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு புலியின் வயிற்றுப் பகுதியில் கயிறு ஒன்று மாட்டி இருந்ததாகவும், அதனால் புலியின் வயிற்றுப் பகுதியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதால் புலி நடக்க முடியாமல் தவித்து வந்ததையும் வனத்துறையினர் உறுதி செய்தனர்.

பின்பு புலிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த வனத்துறையினர், ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையில் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்து உடலில் சிக்கியிருந்த கயிற்றை அகற்றினர்.



பின்பு கூண்டில் வைத்து புலியின் உடல் நிலையை வனத்துறை கண்காணித்து வந்த நிலையில் புலி ஆரோக்கியத்துடன் இருப்பதால் மயக்கம் தெளிந்த உடன் புலியை மீண்டும் கூண்டிலிருந்து வெளியேற்றி வனப்பகுதிக்குள் விடப்பட்டு அப்பகுதியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் கயிறு அறுக்கப்பட்டு காயம் ஏற்பட்ட இருந்த நிலையில் காயத்தின் தீவிரம், அதனால் ஏதேனும் தொற்று ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்வதற்காக புலியின் உடலில் இருந்து ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்து வருவதாக கோவை மண்டல தலைமை வன பாதுகாவலரும், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனருமான ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...