நீலாம்பூரில் கஞ்சா விற்பனைக்கு வந்த இரண்டு பேர் கைது

சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நீலாம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இருவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.


கோவை: சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நீலாம்பூர் பகுதியில் இன்று ஜூன்.17 கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் நீலாம்பூர் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு வந்த நீலாம்பூர் பகுதியை சேர்ந்த சுந்தர ஜெகதீசன் (21) மற்றும் ஓடிசா மாநிலத்தை சேர்ந்த ரீனு ஐயுகா (28) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். 

மேலும் அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...