கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் பசுமையான சூழல் ஏற்படுத்தும் வகையில் குப்பை கிடங்கு எல்லை பகுதியில் சுமார் 9.4 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வேம்பு, பூவரசன், புங்கன், நாவல் உள்ளிட்ட 14 வகையான மரங்கள் என 2000 மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளன.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வெள்ளலூர் குப்பைகிடங்கு வளாகத்தில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ் சுமார் 2000 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் பசுமையான சூழல் ஏற்படுத்தும் வகையில் குப்பை கிடங்கு எல்லை பகுதியில் சுமார் 9.4 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வேம்பு, பூவரசன், புங்கன் மற்றும் நாவல் உள்ளிட்ட 14 வகையான மரங்கள் என 2000 மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளன.

மேலும், மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில், மேயர், தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்து, நல்ல முறையில் பராமரித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், தெற்கு மண்டல குழுத்தலைவர் ர.தனலட்சுமி, ஆளுங்கட்சி தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் அஸ்லாம் பாஷா, உதயகுமார், குணசேகரன், அப்துல்காதர், பாபு, வசந்தா, சரளா, மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...