வெடிப்பொருட்களை போலீசார் அழித்தப்போது பாலமநல்லூரில் வீடுகளில் விரிசல் - கிராம மக்கள் போராட்டம்

நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருட்களை கல்குவாரில் வைத்து வெடிகுண்டு செயலிழப்பு படை போலீசார் வெடித்து அழித்தனர். அப்போது பாலமநல்லூரில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் மற்றும் ஆனைமலை பகுதிகளில் உள்ள தோட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பறிமுதல் செய்த வெடிபொருட்களை நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று பொள்ளாச்சி அருகே உள்ள பாலமநல்லூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கோவை மாவட்ட வெடிகுண்டு செயலிழப்பு படை போலீசார் வெடிப்பொருட்களை வெடித்து அழித்தனர்.



அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் வெடி பொருள்கள் வெடித்ததில் கல் குவாரி அலுவலகத்தில் உள்ள கதவு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன.



அதேபோல் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலமநல்லூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு சுவர்கள், மேற்கூரைகள் சேதமடைந்தன.



இதனால் தனியார் கல்குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமாரிடம் சராமரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அப்போது ஆய்வாளர் குமார் பேசிய போது, ரோட்ல போறப்ப ஆக்சிடென்ட் ஆன தூக்கிலயா போட்டுருவாங்க தெரியாம நடந்து போச்சு மன்னிப்பு கேட்கிறோம். எந்தெந்த வீடு பாதிப்பாய் இருக்குனு சொல்லுங்க என் சொத்த வித்தாவது பணம் தரேன். நானும் பொதுமக்கள் தானே கம்பெனி காரன் தப்பு பண்ணி இருந்தா பரவாயில்லை. கேஸ்ல பிடிச்ச பொருட்களை தான் நீதிமன்றத்தோட அனுமதியோட வெடிக்க வச்சோம். எதார்த்தமா நடந்து போச்சு எத்தனை கோடி எத்தனை லட்சம் ஆனாலும் பாதிச்ச வீடுகளுக்கு இழப்பீடு தர்றேன். நாங்க என்ன ஆந்திரா போலீசா உங்க ஊர் போலீஸ் தானே என சமாளித்தார். இதை கேட்ட பொதுமக்கள் புலம்பிக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...