பொறியியல் பணிகள் காரணமாக கோவை-சென்னை ரயில் சேவையில் மாற்றம் - தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல்-கோவை எக்ஸ்பிரஸ், வரும் 26ம் தேதி வரை, கோவையில் இருந்து மதியம் 3.15 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படாமல், பெரம்பூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: தென்னக ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை சென்ட்ரலில் ரயில்வே பொறியியல் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரயில் எண்.12676 கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல்-கோவை எக்ஸ்பிரஸ், வரும் 26ம் தேதி வரை, கோவையில் இருந்து மதியம் 3.15 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படாமல், பெரம்பூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படும்.

ரயில் எண்.12682 கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ், 21ம் தேதி இரவு 11.30 மணிக்கு கோயம்புத்தூர் ஜங்சனில் இருந்து புறப்பட்டு, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்குச் செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...