கோவை இரயில் நிலையம் சாலையில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய பேருந்துக்கு ரூ.2000 அபராதம்

கோவை இரயில் நிலையம் சாலையில் நோ பார்க்கிங்கில் நின்ற ஹரிஹரசுதன் என்ற தனியார் பேருந்துக்கு போக்குவரத்து போலீசார் ரூ.2000 அபராதம் விதித்தனர். அபராதத்தை கட்டியப்பிறகு பேருந்தை ஓட்டுநர் எடுத்துச் சென்றார்.


கோவை: கோவை ரயில் நிலையம் சாலை மிகவும் பிரதான சாலை. அப்பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். அதனைத் தொடர்ந்து ரயில் நிலையம் அருகே கணுவாய், சோமனூர் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே போதிய பேருந்து நிறுத்த வசதி இல்லாததால் பேருந்துகள் சாலையில் நிறுத்தப்படுவது வழக்கம். ஒரு சில பேருந்துகள் சாலை விதிகளை மீறி நிறுத்துவதால் ரயில் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.



இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே நகர பேருந்துகள் அனைத்தும் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு உடனடியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டும். இந்த நிலையில் ஹரிஹரசுதன் என்ற தனியார் பயணிகள் பெருந்தான 11 ஆம் நம்பர் வண்டி கணுவாய் ரயில் நிலையம் செல்கிறது.



இந்த பேருந்து இன்று ஜூன்.20 கோவை இரயில் நிலையம் சாலையில் நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தியதால் போக்குவரத்து போலீசார் வாகனத்தின் முன் பக்க சக்கரத்தில் பூட்டு போட்டு பின்னர், 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். உடனடியாக நடத்துனர் 2000 ரூபாயை கட்டி விட்டு வாகனத்தை எடுத்துச் சென்றார்.

Newsletter

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...