கோவை சாவித்திரி நகரில் நகைக் கடையில் திருட முயன்ற நபர் கைது

சாவித்திரி நகரில் உள்ள தங்க நகைக் கடையில், இரவு நேரத்தில் கதவை உடைத்து நகைகளை திருட முயன்ற விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை செல்வபுரம் பாலாஜி அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன். (52). இவா் சாவித்திரி நகரில் உள்ள தங்க நகைக் கடையில், பட்டறைத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவா் கடந்த திங்கள்கிழமை ஜூன்.17 கடையில் தங்கி இருந்தார். அப்போது இரவு நேரத்தில் நகைக் கடையின் கதவு உடைக்கும் சப்தம் கேட்டு வந்து பார்த்துள்ளார். இதில் கடைக்குள் இருந்து மகேந்திரன் வருவதை அறிந்த அந்த நபா், அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

அப்போது மகேந்திரனின் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அங்கு வருவதற்குள் அந்த நபா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின் இதுகுறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் மகேந்திரன் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது நகைக் கடைக்குள் புகுந்து திருட முயன்ற நபா் விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமார் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை நேற்று ஜூன்.19 கைது செய்தனா்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...