ஏப்ரல் 15ம் தேதியன்று சிறை அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வருகின்ற ஏப்ரல் 15ம் தேதியன்று (சனிக்கிழமை) பகல் 10 மணி முதல் 1 மணி வரையும் மற்றும் பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரையும் சிறை அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை சித்தாபுதூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள இரு தேர்வு கூடத்தில் நடைபெறவுள்ள இத்தேர்வினை 546 நபர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வினை நடத்த 2 முதன்மை கண்காணிப்பாளர்கள், ஒரு மொபைல் அலுவலர், ஒரு வீடியோ கிராபர் மற்றும் நமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஆய்வு அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தேர்வு மையங்களில் பாதுகாப்பின் பொருட்டு போதுமான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் தடையில் மின்சாரம் வசதி செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்வு எழுதும் தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கபட்ட நுழைவுச் சீட்டு கொண்டு வர வேண்டும் எனவும், தேர்வு அறைக்குள் மொபைல் போன் உள்ளிட்ட மின்னியக்க கருவிகள் எதையும் எடுத்து வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முதன்மை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...