உடுமலையில் தொடர்ந்து 15 நாட்கள் கண்களை கட்டிக்கொண்டு யோகாசனம் செய்து யோகா பயிற்சியாளர் அசத்தல்

தொடர்ந்து 15 நாட்கள் 360 மணி நேரம் கண்களை கட்டிகொண்டு யோகா பயிற்சியாளர் குணசேகரன் என்பவர் யோகதண்டாசனம், சக்கராசனம், சிரசாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை இடைவிடாது செய்தது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மரகதம் யோகாலயம் எனும் பெயரில் யோகாசன பயிற்சிகளை அளித்து வருபவர் குணசேகரன், யோகாசனத்தில் கின்னஸ் சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை செய்த இவர் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று உலகிலேயே நீண்ட நேரம் கண்களை கட்டிகொண்டு யோகாசனங்களை செய்யும் உலக சாதனை முயற்சியை தொடங்கினார்.

தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வை உடுமலை டி.எஸ்.பி.சுகுமாறன், வித்யா நேத்திரா பள்ளி தாளாளர் தம்பு என்கிற நந்தகோபாலகிருஸ்னன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து 15 நாட்கள் 360 மணி நேரம் கண்களை கட்டிகொண்டு யோகாசனங்கள் செய்யும் முயற்சியாக யோகதண்டாசனம், சக்கராசனம், சிரசாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை இடைவிடாது இவர் செய்தது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.



பார்வையற்றவர்களும் யோகாசனங்களை செய்து நோயில்லா ஆரோக்கிய வாழ்வை பெற்றிடவேண்டும் என்பதற்காக அவர்களுக்கும் யோகாசனங்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அனைவரும் யோகாசனங்களின் பயன்களை அறிந்திடவேண்டும் என்பதற்காகவும், உலகசாதனை முயற்சியில் ஈடுபட்டதாக யோகா குரு குணசேகரன் கூறினார்.

இந்நிகழ்வில் ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்திய சி.இ ஒ.சுமன்பாலே லண்டன் சி.இ.ஒ கே.ஸ்ரீகாந்த் சினேகம் டிரஸ்ட் சுவாமி சுனில்தாஸ், உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...