கோவை கருமத்தம்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

ஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாலிக் பாஷாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று ஜூன்.21 போலீசார் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் 1 கிலோ 350 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாலிக் பாஷா(26) என்பவரை கருமத்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக மாலிக் பாஷா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளியான மாலிக் பாஷாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று ஜூன்.21 சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...