கோவை ஈஷா ஹோம் பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பீளமேடு அருகே சென்றபோது மின்சாரம் தாக்கி 12ம் வகுப்பு மாணவர் மோக்ஷக்னா எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளதாக கோவை ஈஷா ஹோம் ஸ்கூல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை ஈஷா ஹோம் ஸ்கூல் நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எங்கள் பள்ளி மாணவர்கள் நேற்று ஜூன்.21 ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோயம்புத்தூர் பீளமேடு அருகே சென்றார்கள்.

அப்போது அங்கு நடந்த விபத்தில் எங்கள் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர் மோக்ஷக்னா எதிர்பாராதவிதமாக மின்னதிர்ச்சிக்கு உள்ளானார். அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து அவரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. விசாரணையும் நடைப்பெற்று வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...