தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாள் – தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் முகாம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததானம் முகாமில் நிர்வாகிகள் ரத்தம் தானம் செய்தனர். இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களையும் அவர்கள் வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தாராபுரம் தொகுதி பொறுப்பாளர் கவுண்டச்சி புதூர் தலைவர் செல்வி ரமேஷ் தலைமையில் 50 பேர் ரத்தம் தானம் வழங்கினர்.

ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் சொர்க்கம் ரமேஷ், திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ், திருப்பூர் இளைஞரணி தலைவர் ஷேக் பரித், நகரத் தலைவர் சார்லி விக்டர், நகர இளைஞரணி தலைவர் கதிர் தொழிலாளர் அணி தலைவர் ஹரிஹர சுதன், தொழிற்சங்க அணி ஸ்ரீகாந்த், தொண்டரணி பிரபு, மாணவரணி எழில் பிரபாகரன் உள்ளிட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் இரத்ததான முகாமில் ரத்தம் வழங்கினார்.



முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவர் கௌதம் முதல் முறையாக தளபதியின் பிறந்தநாள் அன்று ரத்தம் தானம் செய்வேன் என்று உறுதியற்றார். மேலும் தாராபுரம் நகர் பகுதியில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு மதிய உணவு, இலவச கண் சிகிச்சை மற்றும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை நிர்வாகிகள் வழங்கினர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...