கோவையில் இல்லந்தோறும் திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பீளமேடு பகுதி-2, 28வது வார்டு, ஆவாரம்பாளையம், தெற்கு வீதி, படாளம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., முன்னிலையில் இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.



கோவை: தமிழக முதலமைச்சர், திமுக கழகத் தலைவரின் கரத்தை வலுப்படுத்த, கழக இளைஞரணிச் செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தலைமையில், இல்லந்தோறும் இளைஞர் அணி "உறுப்பினர் சேர்க்கை முகாம் தமிழ்நாடெங்கும் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், கோவை மாநகர் மாவட்டத்தில் ஏற்கனவே "இல்லந்தோறும் இளைஞர் அணி"உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் இன்று (24-6-2024), திங்கட்கிழமை காலை, பீளமேடு பகுதி-2, 28வது வார்டு, ஆவாரம்பாளையம், தெற்கு வீதி, படாளம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., முன்னிலையில் கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில், கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபால் மேற்பார்வையில், பீளமேடு பகுதி-2 செயலாளர் நாகராஜ் தலைமையில் 28வது வட்டக் கழகச் செயலாளர் மோகன்ராஜ் முன்னிலையில், இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.



இதில் மாநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் லாரா பிரேம் தேவ், க.மணிகண்டன், கோவை அருண்,துரைபிரவீண், இப்னு மசூது, வட்டக் கழகச் செயலாளர் எஸ்.ஜே.தாஸ், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...