ஈஷா ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டுத் தரக் கோரி நிலத்தின் உரிமையாளர் கோவை ஆட்சியரிடம் மனு

பழங்குடியின மக்களுக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை ஈஷா நிர்வாகம் ஆக்கிரமிட்பு செய்துள்ளதாக நிலத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அந்த நிலத்தை மீட்டு மீண்டும் அவர்களுக்கே கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் செம்மேடு பகுதியை சேர்ந்தவர் அமெரிக்கா கவுண்டர்(எ) முத்துச்சாமி கவுண்டர். இவருக்கு சொந்தமான 44.3 ஏக்கர் நிலம் 1990களில் அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த நிலத்தை அங்கு வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு கொடுக்கும் படி முத்துச்சாமி கவுண்டர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் அந்த நிலத்தை ஈஷா நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை மீட்டு பழங்குடியின மக்களிடமே தரும்படியும் முத்துச்சாமி கவுண்டரின் மகள் விஜயகுமாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஜூன்.24 புகார் மனு அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், தங்கள் குடும்பத்தினர் அந்த இடத்தை அங்குள்ள ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு கொடுப்பதற்காக அரசிடம் கொடுத்த நிலையில், தற்போது ஈஷா நிர்வாகம் அதனை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்தார்.

அந்த நிலம் பழங்குடியின மக்களுக்கு சென்றடைய வேண்டிய நிலையில் அங்கு ஈஷாவினர் அவர்களது தேவைக்கு பயன்படுத்தி வருவதாக கூறினார். அந்த நிலத்திற்காக அனைத்து மூல பத்திர ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக கூறினார். மேலும் அங்கு கட்டப்படும் மின் மயானம் அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு தேவையே இல்லை எனவும், இவர்கள் புதைக்கும் வழக்கத்தை கொண்டவர்கள் எனக் கூறினார்.

அதே போல் செம்மேடு பகுதியை சேர்ந்த குளத்தேரி பழங்குடி மக்கள் தங்கள் கிராமத்தை ஒட்டியுள்ள இடத்தில் ஈஷா நிர்வாகம் மின் வேலி அமைத்துள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டுமென மனு அளித்தனர். அதே சமயம் தங்களுக்கு மின் தகன மேடையும் தேவையில்லை எனவும், தாங்கள் புதைக்கும் வழக்கத்தை கொண்டவர்கள் என தெரிவித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...