வால்பாறை அருகே கூழாங்கல் ஆற்றில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலாப்பயணிகள்

மழை காரணமாக கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில், ஆற்றில் குளிக்கவும்,தண்ணீரில் இறங்கி விளையாடவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.



கூழாங்கள் ஆறு மற்றும் நல்லகாத்து ஆறு, நடுமலை ஆறு, வெள்ளம் மலை டானல், கெஜமுடி ஆறு, சோலையார் பிர்லா பால்ஸ், சோலையார் அணை ஆறு, கருமலை இறைச்சிப்பாறை ஆறு, போன்ற ஆறுகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் குறைவான மழை பெய்யும் பொழுது, வனப்பகுதியில் அதிகமான மழை பெய்யும். இதனால் ஆற்றில் திடீர் காற்றாற்று வெள்ளம் ஏற்படும். தண்ணீரில் இறங்கி குளிக்கும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆற்றில் தண்ணீரில் அடித்து செல்வார்கள் என்று இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறுகளில் இறங்க குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



இத்த தடைகளை மீறி கூழாங்கல் ஆற்றில் காவல்துறை இல்லாத சூழ்நிலையில், சட்ட விரோதமாக அப்பகுதிகளில் கடைகளை நடத்தக்கூடிய வியாபாரிகள், வியாபார நோக்கத்தோடு சுற்றுலாப் பயணிகளை ஆற்றில் இறங்கி குளிக்க மற்றும் விளையாடுவதற்கு அனுமதிக்கிறார்கள் என்று சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதில் ஆபத்தை உணராமல் குளிப்பதால் திடீர் வெள்ளம் பெருக்கு வந்தால் என்ன செய்வது என்று அறியாமல் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.

கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கடைகளை அகற்ற வேண்டும் என்றும், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள் மட்டும் கடைகளை வியாபாரம் செய்ய அனுமதிக்குமாறு சுற்றுலா பயணிகள் கேட்டுக்கொண்டனர். ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...