ரூ.10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. மோசடி வழக்கு - கோவையில் பெண்ணை கைது செய்த நொய்டா போலீசார்

ரூ.10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. மோசடி தொடர்பான வழக்கில் கோவையில், உலோகம் தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வரும் சுகன்யாவை நொய்டா போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.



கோவை: போலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி., மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய கோவையை சேர்ந்த பெண்ணை, நொய்டா போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலம், நொய்டாவில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.,) மோசடி நடந்தது தொடர்பாக, கடந்தாண்டு ஜூன் மாதம் வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதாவது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி, போலியாக இ-வே பில் தயாரித்தும், உள்ளீட்டு வரிச் சலுகை (ஐ.டி.சி.,) பெற்றும் மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக, டில்லி, ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரசேதம் மாநிலங்களில் இதுவரை, 45 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த சுகன்யா என்பவர், மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர் கோவையில், உலோகம் தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். போலி நிறுவனங்களின் பெயரில், ஐ.டி.சி., பெற்று கடந்த ஓராண்டில் ரூ.14.2 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்துதலைமறைவாக இருந்த சுகன்யா மீது மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இவர் குறித்து தகவல் தருவோருக்கு, ரூ.25 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் எனவும், மூன்று மாதங்களுக்கு முன்பு நொய்டா போலீசார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இவர் இருக்கும் தகவல் அறிந்து, நொய்டா போலீசார் கடந்த, 22ம் தேதி கோவை வந்தனர். பின்னர் கோவை போலீசாரின் உதவியுடன், ரேஸ்கோர்ஸில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கியிருந்த சுகன்யாவை கைது செய்து, நொய்டா கொண்டு சென்றனர். அவரது கணவர் பிரபுவையும் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...