சின்னியம்பாளையம் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கறுப்புகொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்



கோவை சின்னியம்பாளையம் பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கறுப்புகொடி கட்டி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் டாஸ்மாக கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 



அதனொரு பகுதியாக கோவையை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்ட டாஸ்மாக் கடையை விவசாய நிலத்தில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு கட்டிடம் கட்டும் பணிகளும் நிறைவடைந்துள்ளது. 

இதற்கு அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் எதிர்ப்புதெரிவித்து வந்த நிலையிலும் அதற்கான பணிகளை அதிகாரிகள் கைவிடவில்லை. இதனால் அதிர்ப்தி அடைந்த கிராம மக்கள் வீடுகள் மற்றும் கடைகள், தொழிற்சாலைகளில் கறுப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் இப்பகுதியில் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படும் எனவும், ஏற்கனவே தெரு விளக்குகள் இல்லாததால் இந்த பகுதியை கடக்க பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் மதுக்கடை அமைத்தால் இந்த பகுதியை கடக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் உட்பட அனைவருக்கும் இடையூறாக அமையும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களுடைய எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை அமைக்கும் பட்சத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...