கோவை ரெயில் நிலையத்தில் ரூ.25,000 பணம் மற்றும் 2 செல்போன் பறிப்பு - ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை

ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்துக்கொடுக்க உதவுவதுபோல் நடித்து பீகார் மாநிலத்தை சேர்ந்த பிலாந்தரிடம் ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிலாந்தர் (35). இவர் கோவையில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருகிறார். நேற்று ஜூன்.24 அவர் சொந்த ஊர் செல்ல டிக்கெட் முன் பதிவு செய்வதற்காக கோவை ரயில் நிலையம் வந்தார். அப்போது ரயில் நிலையம் முன்பு நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் பிலாந்தரிடம் சென்று டிக்கெட் எடுத்து தருவதற்கு உதவி புரிவதாக தெரிவித்தார்.

இதனை நம்பி பிலாந்தர் அந்த வாலிபருடன் நடந்து சென்றார்.அப்போது அந்த மர்ம நபர் திடீரென பிலாந்தரிடம் இருந்த ரூ. 25 ஆயிரம் பணம் மற்றும் 2 செல்போன்களை பறித்து சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பிலாந்தர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...