கோவை ரெயில் நிலையத்தில் ரூ.25,000 பணம் மற்றும் 2 செல்போன் பறிப்பு - ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை

ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்துக்கொடுக்க உதவுவதுபோல் நடித்து பீகார் மாநிலத்தை சேர்ந்த பிலாந்தரிடம் ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிலாந்தர் (35). இவர் கோவையில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருகிறார். நேற்று ஜூன்.24 அவர் சொந்த ஊர் செல்ல டிக்கெட் முன் பதிவு செய்வதற்காக கோவை ரயில் நிலையம் வந்தார். அப்போது ரயில் நிலையம் முன்பு நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் பிலாந்தரிடம் சென்று டிக்கெட் எடுத்து தருவதற்கு உதவி புரிவதாக தெரிவித்தார்.

இதனை நம்பி பிலாந்தர் அந்த வாலிபருடன் நடந்து சென்றார்.அப்போது அந்த மர்ம நபர் திடீரென பிலாந்தரிடம் இருந்த ரூ. 25 ஆயிரம் பணம் மற்றும் 2 செல்போன்களை பறித்து சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பிலாந்தர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...