இலவச வீட்டு மனை பட்டா கேட்டு உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கோட்டமங்கலம், பொன்னேரி, குடிமங்கலம், பெரியபட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நான்காவது நாளாக ஜமாபந்தி நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் கோட்டமங்கலம், பொன்னேரி, குடிமங்கலம், பெரியபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



இதுபற்றி கூறிய கிராம மக்கள், கடந்த சில வருடங்களாகவே இலவச வீட்டு மனை இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றோம். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் இன்று நடைபெறும் ஜமாபந்தியில் வருவாய் கோட்டாட்சியர் கண்ணனிடம் மனு வழங்கியுள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து வீடு இல்லாதமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிமங்கலம், கோட்டமங்கலம், பொன்னேரி, வரதராஜபுரம் கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி முற்றுகையிட்டதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...