கோவை மாநகராட்சி பகுதிகளில் பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (26.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 83 ஆரம்பப் பள்ளிகள், 38 நடுநிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 17 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அதன்படி, மாநகராட்சி ஆணையாளர், மத்திய மண்டலத்திற்குட்பட்ட சுண்டக்கா முத்தூர் சாலை, செல்வபுரம் பகுதியில் செயல்படும் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு, மாணவியர்களிடம் பாடத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். மேலும், அப்பள்ளிகளில் கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.



அதனைத்தொடர்ந்து, மத்திய மண்டலம் சாரமேடு அனுப்பர்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியினையும், வடக்கு மண்டலம் வார்டு எண் 3-அஞ்சுகம் நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியினையும் மற்றும் வார்டு எண்.28க்குட்பட்ட ஆவாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியினையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, அஞ்சுகம் நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை சுவைத்து பார்த்தார்.



மேலும், வடக்கு மண்டலம் வார்டு எண் 10 சரவணம்பட்டி மோக்ஷ க்ருஹா எரியூட்டு மயான வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



முன்னதாக, மத்திய மண்டலம் நஞ்சப்பா சாலை பகுதியில், மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சாலைகளில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றுவதற்காக கொள்முதல் செய்யப்பட்ட நவீன மர அறுவை இயந்திரத்தின் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமரன், கவிதா, கண்ணகிஜோதிபாசு, உதவி செயற்பொறியாளர்கள் ஹேமலதா, எழில், உதவி பொறியாளர்கள் சதீஷ்குமார், சக்திவேல், பள்ளி தலைமை ஆசிரியர்கள், சி.ஆர்.ஐ.பம்ஸ் தலைவர் சௌந்தர்ராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...