சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு - கோவையில் விவசாயிகள் சங்க தலைவர் வரவேற்பு

சாதி வேறுபாடின்றி, பொருளாதாரம், கல்வி, மருத்துவம், முன்னேற்றம், ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், நீண்ட காலமாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த கோரிக்கை ஒரு தீர்வு காண்கின்ற வகையில் தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிப்பை வரவேற்பதாக கூறினார்.

இதை வைத்துக்கொண்டு அரசியல் ரீதியாக அல்லது மக்களிடத்தில் பிரிவினையை, ஏற்படுத்தக்கூடிய சில நபர்களும் இருப்பதாக கூறிய அவர், சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்துள்ளதால், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த சாதி வாரி கணக்கெடுப்பு, ஏற்ற தாழ்வு இல்லாமல், சாதி வேறுபாடின்றி, பொருளாதாரம், கல்வி, மருத்துவம், முன்னேற்றம், ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த கணக்கெடுப்பிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிய அவர், இந்த முயற்சிக்கு தமிழ்நாடு விவசாய சங்கம் முழுமையான வரவேற்பை வழங்குவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...