மத்தம்பாளையத்தின் பிரதான சாலையோரத்தில் 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறப்பு

தற்போது மேட்டுப்பாளையம் ஜிஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Coimbatore: கோவை மாவட்டம், மத்தம்பாளையம், அம்பேத்கர் நகரில், காரமடையைச் சேர்ந்த 108 குழுவினருக்கு நேற்று ஜூன்.26 பிரசவ வழி என்று அழைப்பு வந்தது.

23 வயதான கர்ப்பிணி பெண் சௌமியா மிகவும் பிரசவ வழியுடன் இருப்பதை உணர்ந்து ஆம்புலன்ஸ் குழு உடனே அவர்களை ஏற்றி கொண்டு புறப்பட்டனர்.



பின் அவசர மருத்துவ உதவியாளர் பாலமுருகன் மற்றும் பைலட் அருண் ஆகியோர் மழையின் போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சௌமியாவை மேட்டுப்பாளையம் ஜிஹெச்க்கு ஏற்றிச் செல்லும் வழியில் மத்தம்பாளையத்தின் பிரதான சாலையோரத்தில் வைத்து பிரசவத்தில் ஈடுபட்டனர். அப்போது சௌமியாக்கு அழகான ஆண் குழந்தை ஆம்புலன்ஸில் பிறந்தது.



மழையின் போது ஆம்புலன்சுக்குள் பிரசவத்தை கையாண்ட குழுவினர் பொதுமக்களால் பாராட்டப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் மேட்டுப்பாளையம் ஜிஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், மருத்துவர்கள் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...