தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக பாடைசுமந்து போராட்டம் நடத்திய அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கைது

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்திக்காத பிரதமர் மோடியை கண்டித்து, கோவையில் பாடை சுமந்து போராட்டம் நடத்திய அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கைது செய்யப்பட்டனர். 



வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக கோவை இரயில் நிலையம் முன்பாக டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்திக்காத பிரதமர் மோடியை கண்டித்து, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி, ஒரு மாணவரை பாடை போல எடுத்து வந்து போராட்டம் நடத்தினர். டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக குற்றம்சாட்டிய மாணவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். 

மேலும் விவசாயிகள் வங்கிகடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இரத்து செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதையடுத்து இரயில் நிலையத்திற்குள் சென்று இரயில் மறியலில் ஈடுபட முயன்ற 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...