தமிழக அரசின் துணையோடு தான் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது - கோவை ஆட்சியரிடம் தேமுதிக புகார்

அரசின் துணையோடு தான் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. கள்ளச்சாராயம் மரணத்திற்கு திமுக அரசு தான் முற்றிலும் காரணம். கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தேமுதிக சார்பில் கருப்பு சட்டை அணிந்து புகார் மனு அளிக்கப்பட்டது.


கோவை: தமிழக அரசின் துணையோடு தான் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. கள்ளச்சாராயம் மரணத்திற்கு திமுக அரசு தான் முற்றிலும் காரணம். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை, கஞ்சா, கள்ளச்சாராய விற்பனையை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும்.



கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தேமுதிக சார்பில் கருப்பு சட்டை அணிந்து வந்து புகார் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்வாகி சந்துரு, தமிழகம் முழுவதும் டாஸ்மாக், கஞ்சா, கள்ளச்சாராய விற்பனையை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும். தமிழக அரசின் துணையோடு தான் கள்ளச்சாராய விற்பனையும், கஞ்சா விற்பனையும் நடைபெறுகிறது. இதை உடனடியாக மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும். மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி கள்ளச்சாராயம் குடித்து 63 பொதுமக்கள் மரணத்திற்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும். கள்ளச்சாராய மரணத்திற்கு ஆளுகின்ற திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய வழக்கை சிபிஐ(CBI) விசாரணைக்கு உடனடியாக மாற்ற தாங்கள் பரிந்துரை செய்ய வேண்டும். தமிழகத்தில் நடக்கும் அனைத்து சாராய ஆலைகளும் ஆளும் கட்சியினரால் நடத்தப்படுகிறது. எனவே சாராய ஆலைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...