கனமழை காரணமாக நொய்யல் பேரூர் படித்துறையில் நீர்வரத்து அதிகரிப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி

மழையால் பேரூர் படித்துறையில் எட்டு மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஐந்து படிக்கட்டுகள் மூழ்கியடி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. ஆற்றில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை, குப்பைகளை, துணிகளை வீசக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


கோவை: மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருகின்றது.



இதனால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்ற நிலையில், கோவை நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செந்நீராக மழை நீர் ஆற்றில் ஓடுகின்றது. இதனால் தண்ணீர் வராத பல்வேறு இடங்களிலும் தண்ணீர் வர ஆரம்பித்து இருக்கிறது.

நொய்யல் ஆற்றின் மிக முக்கியமான பகுதியான பேரூர் படித்துறையில் கடந்த எட்டு மாதங்களாக பெரிய அளவிலான நீர் வரத்து இல்லை. நொய்யல் ஆறு வறண்டது. இதனால் தர்ப்பணம் தருவோர் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருந்தனர். பேரூர் ஆற்றில் வெள்ளம் இல்லாததால் அருகாமையில் உள்ள விவசாய நிலங்களுக்கு போதுமான பாசனமும், கால்நடைகளுக்கு தண்ணீரும் இல்லாமல் இருந்தன.



இந்த நிலையிலே கடந்த ஒரு வார காலமாக பொழிந்து வரும் மழையினால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு, நொய்யல் பேரூர் படித்துறையிலும் ஓடுகிறது. ஐந்து படிக்கட்டுகள் மூழ்கி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. பொதுமக்கள் இதில் பிளாஸ்டிக் பொருட்களை, குப்பைகளை, துணிகளை வீசக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

வெள்ளம் வேகமாக செல்லும் பகுதிகளில் இறங்கவோ, குளிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என அதிகாரிகள் வலியுறுத்தினர். தர்ப்பணம் தருவோருக்கு தண்ணீர் அவசியம் என்ற நிலையில், ஆடி அமாவாசைக்கு தற்பொழுது வரும் வெள்ளம் போதுமானதாக இருக்கும் என புரோகிதர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். வறட்சி நீங்கும் விதமாக தொடர்ந்து மழை பொழியும் நிலையில், அதனை ரசிப்பதாகவும், நீர் நிலைகளில் போதுமானதாக பாதுகாப்புடன் இருக்க வேண்டுமெனவும், அப்பகுதியில் அதிகாரிகள் அறிவுறுத்தியதனை அப்பகுதி மக்கள் நினைவுகூர்ந்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...