கோவை கே.ஜி.மருத்துவமனை முன்பு போக்குவரத்தை சரி செய்த மருத்துவர் பக்தவச்சலம்

கே.ஜி.மருத்துவமனை முன்பு வாகன நெரிசல் வழக்கத்துக்கும் மாறாக அதிகமாக ஏற்பட்டது. அதனை சரி செய்யும் வகையில் கே.ஜி.மருத்துவமனை தலைவர் மருத்துவர் பக்தவச்சலம் வாகனங்களை சீர்செய்து போக்குவரத்து நெரிசலை சரி செய்து பாதசாரிகள் வழியாக பொது மக்களை அனுப்பி வைத்தார்.


கோவை: கோவையில் பல்வேறு பகுதிகளில் உயர் மேம்பாலங்களில் பணி நடைபெற்று வருவதால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை பந்தையசாலை மற்றும் அரசு கலைக்கல்லூரி சாலைகளில், மருத்துவமனை, நீதிமன்றம், திரையரங்கம், கல்லூரி மற்றும் பள்ளிகள் இருப்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று ஜூன்.27 அச்சாலையில் உள்ள கே.ஜி.மருத்துவமனை முன்பு வாகன நெரிசல் வழக்கத்துக்கும் மாறாக அதிகமாக ஏற்பட்ட நிலையில் அதனை சரி செய்யும் வகையில் கே.ஜி.மருத்துவமனை தலைவர் மருத்துவர் பக்தவச்சலம் வாகனங்களை சீர்செய்து போக்குவரத்து நெரிசலை சரி செய்த பின்பு பாதசாரிகள் வழியாக பொது மக்களை அனுப்பி வைத்தார்.

மருத்துவரின் இச்செயல் அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றதுடன் மருத்துவர் போக்குவரத்தை சரி செய்யும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...