கோவை கே.ஜி.மருத்துவமனை முன்பு போக்குவரத்தை சரி செய்த மருத்துவர் பக்தவச்சலம்

கே.ஜி.மருத்துவமனை முன்பு வாகன நெரிசல் வழக்கத்துக்கும் மாறாக அதிகமாக ஏற்பட்டது. அதனை சரி செய்யும் வகையில் கே.ஜி.மருத்துவமனை தலைவர் மருத்துவர் பக்தவச்சலம் வாகனங்களை சீர்செய்து போக்குவரத்து நெரிசலை சரி செய்து பாதசாரிகள் வழியாக பொது மக்களை அனுப்பி வைத்தார்.


கோவை: கோவையில் பல்வேறு பகுதிகளில் உயர் மேம்பாலங்களில் பணி நடைபெற்று வருவதால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை பந்தையசாலை மற்றும் அரசு கலைக்கல்லூரி சாலைகளில், மருத்துவமனை, நீதிமன்றம், திரையரங்கம், கல்லூரி மற்றும் பள்ளிகள் இருப்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று ஜூன்.27 அச்சாலையில் உள்ள கே.ஜி.மருத்துவமனை முன்பு வாகன நெரிசல் வழக்கத்துக்கும் மாறாக அதிகமாக ஏற்பட்ட நிலையில் அதனை சரி செய்யும் வகையில் கே.ஜி.மருத்துவமனை தலைவர் மருத்துவர் பக்தவச்சலம் வாகனங்களை சீர்செய்து போக்குவரத்து நெரிசலை சரி செய்த பின்பு பாதசாரிகள் வழியாக பொது மக்களை அனுப்பி வைத்தார்.

மருத்துவரின் இச்செயல் அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றதுடன் மருத்துவர் போக்குவரத்தை சரி செய்யும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...