பீளமேடு ரயில்வே பாலத்தின் அருகில் சுரங்கப்பாதை அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடிஏற்றி போராட்டம்

கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே பாலத்தின் அருகில் சுரங்கப்பாதை அமைக்காததை கண்டித்து அப்பகுதியில் உள்ள ஹட்கோ காலனி, முருகன் நகர் பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடிஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை பீளமேடு ரயில் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் மேம்பாலத்தின் அருகில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. மேலும் ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு வாகனங்கள் செல்ல தனியாக பாதை ஏற்படுத்தாமல் ஹட்கோ காலனி, முருகன் நகர் பகுதிகள் வழியாக இயக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில், ரயில்வே நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து இன்று பீளமேடு முருகன் நகர், ஹட்கோ காலனி ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடிகளில் கருப்பு கொடி ஏற்றி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகில் சுரங்கபாதை அமைத்து தர வேண்டும் எனவும், பீளமேடு ரயில் நிலையத்தில் இருந்து கனரக வாகனங்களை குடியிருப்பு பகுதிகள் வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளதை ரயில்வே நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையும் கைவிட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...